பாஜக தலைவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு புகார்

பாஜக தலைவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு புகார்
பாஜக தலைவர்கள் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு புகார்

 மதுரை மார்ச் 1

பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்களையும் அவதூறு செய்யும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்ட தீய நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் அந்த பதிவுகளை நீக்க கோரியும், பாஜக IT&SM மாநில தலைவர் திரு CTR நிர்மல் குமார் ,மாநில துணைத்தலைவர் திரு அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின்படியும் , மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் திரு AP ராஜசிம்மன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ,பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் திரு ராம்சரண் தலைமையில் மாநிலச் செயலாளர் திரு விஸ்வநாத் மற்றும் சிறுபான்மையினர் அணியின் மாநில செயலாளர் சாம் சரவணகுமார் அவர்கள் முன்னிலையில் மாவட்ட துணை தலைவர்கள் கார்த்திக் ராஜா, வலையபட்டி கண்ணன், தினேஷ்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் முருகேசன் மதனகோபால் ஆகியோரால் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.