குடும்ப வன்முறை விழிப்புணர்வு முகாம் உசிலம்பட்டி தன்னார்வ அமைப்பு

குடும்ப வன்முறை விழிப்புணர்வு  முகாம் உசிலம்பட்டி தன்னார்வ அமைப்பு
குடும்ப வன்முறை விழிப்புணர்வு  முகாம் உசிலம்பட்டி தன்னார்வ அமைப்பு

குடும்ப வன்முறை பாதுகாப்பு  விழிப்புணர்வு
 
உசிலம்பட்டி *விஷன் பவுண்டேசனில்* சர்வதேச குற்ற தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் நலம் நாடும் மையம் *(PCVC)* சார்பில் பெண்களுக்கான குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எக்விடாஸ் சார்பில் ஆரி வேலைப்பாடு யயிற்சியின் துவக்க விழா நடந்தது. 

விழாவிற்கு விஷன் பவுண்டேசன் தலைவர் வழக்கறிஞர் பொன்ராம் தலைமை தாங்கினார். எக்விடாஸ் அறக்கட்டளையின்  சிஎஸ்ஆர் மேலாளர் ராஜா முன்னிலை வகித்தார். பிசிவிசிஆர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுடர்ஒளி, கன்னியம்மாள் ஆகியோர் குடும்ப வன்முறை யிலிருந்து தற்காத்து கொள்வது மற்றும் பாதிக்க பட்டவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கினர். எக்விடாஸ் பயிற்றுனர் ராஜேஸ்வரி ஆரி வேலைப்பாடு பயிற்சி வழங்கினார். விழாவில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி  ஒன்றிபங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கஸலந்து கொண்டனர். விஷன் பவுண்டேசன் திட்ட இயக்குனர் செல்வராணி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எக்விடாஸ்
 பணியாளர்கள் பிரபு, கோகுல் மற்றும் பலர் செய்திருந்தனர்.