உசிலம்பட்டியில் பாஜகவின் ஆய்வுக்கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு

உசிலம்பட்டியில் பாஜகவின் ஆய்வுக்கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
உசிலம்பட்டியில் பாஜகவின் ஆய்வுக்கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
உசிலம்பட்டியில் பாஜகவின் ஆய்வுக்கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு

உசிலம்பட்டி ஜூலை 3

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது  

மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் வழிகாட்டதலின்படி நகர தலைவர் முந்தையா அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தலைவர் சொக்கநாதன் மாவட்ட செயலாளர் மொக்கராசு முன்னிலையில் நடைபெற்ற து கூட்டத்தில் நகர பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

1,மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய உழைக்க வேண்டும்

2,, அனைத்து வார்டுகளிலும் உள்ள மக்கள் பிரச்சினைகளை கலைய உடனடியாக தீர்வு காண வேண்டும்

3, ஆளும் திமுக அரசின் மெத்தனம் போக்கை கண்டித்து 5ம்தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர் நகர பொதுச்செயலாளர் முத்து நன்றி கூறினார்